பாபா வாங்க கூறிய ரகசியம் - 2015 க்கு பின்னர் நிகழப்போவது என்ன

வ்வொரு தனிப்பட்ட உயிருக்கும் தன் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்போ ஏக்கமோ, ஊகங்களோ, பயமோ இல்லாமல் இருப்பதில்லை. சிலருக்கு பிற்காலம் பற்றிய சில விடயங்கள் கனவுகள் வாயிலாக வெளிப்படுவதுண்டு.

பலர் தம் எதிர்காலம் குறித்த மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதற்காய் ஜாதகம், ஜோதிடம், சாஸ்திரம் போன்றவற்றை நாடுவதும் உண்டு. இத்தகைய கணிப்புக்கள் பெரும்பாலும் தனிநபர் சார்ந்ததாகவோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட உறவுகள் சார்ந்ததாகவோ ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளாய்த் தேடப்படுகின்றன –அறியப்படுகின்றன.

இவ்வாறன்றியும், இவற்றைக் கடந்ததாயும் முழுமொத்த உலகின் எதிர்காலம் பற்றிய முற்கணிப்புக்களை மிகத் துல்லியமாகக்கூறிய வெகுசிலரும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள்.



அவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் மைக்கேல் நொஃப்ரடோமஸ் மற்றும் பாபா வாங்கா. இவர்களில் இன்றைய இந்தத் தொகுப்பின் நாயகி பாபா வாங்கா.

‘கிராண்ட் மதர் வாங்கா’ (Grand Mother Vaanga) என்று அழைக்கப்படும் வாங்கா, தன்னுடைய மர்மமான – மனித அறிவுக்கு எட்டாத துல்லியமான முற்கணிப்புக்களை வெளிப்படுத்தியதன் வாயிலாகப் பிரபல்யம் அடைந்தவர்.

இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் அவரது திறன் சார்ந்த குடும்பப் பின்னணி ஏதும் இல்லை. (முந்தைய) ஒட்டோமன் எம்பயரைச் (ழுவவழஅயn நுஅpசைந) சேர்ந்த (இப்போதைய) மெக்கடோனியா (Ottoman Empire) என்ற இடத்தில் 1911 தை 31ஆம் திகதி சிறு விவசாயக் குடும்பத்தில் இவர் பிறந்தார்.



அனைத்தையும் முன்கூட்டிச் சொல்லும் வாங்கா, பிறப்பிலும் முன்கூட்டியே எட்டு மாதக் குறைப்பிரசவக் குழந்தையாகப் பிறந்தவர். அந்நாட்டு வழக்கப்படி குறைப்பிரசவக் குழந்தைக்கு உடனே பெயர் வைப்பது இல்லை. அக்குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பதும் இல்லை.

அதிலும் வாங்கா பிறக்கும் போது மிகவும் பலவீனமாகவும், அவரது காது, கை, கால்கள் எல்லாம் ஒட்டப்பட்ட நிலையிலும் இருந்ததால் ஒன்பது மாதங்களிலேயே அவர் இறந்துவிடுவார் என்றும் சொல்லப்பட்டது.

எனினும் அவர் ஒன்பது மாதங்கள் கடந்தும் உயிர் வாழ்ந்ததால் அவருக்கு ஆன்ரோமகா மற்றும் வாஞ்சிலா என இரு பெயர்கள் சூட்டப்பட்டதோடு பெற்றோருடனான இயல்பு வாழ்க்கையும் வாழும் வாய்ப்பும் கிடைத்தது.

சிறுவயது முதலே பலருக்கு உதவும் சிறுமியாய் இருந்த வாங்கா, தன்னை ஒரு மருத்துவராய் உருவகித்துக் கொண்டு காயப்பட்ட, நோய்வாய்ப்பட்ட தன் தோழிமாருக்கு சிறுசிறு வைத்தியங்களைச் செய்வாளாயினாள். அழகிய நீலக் கண்களைக் கொண்ட அவள், தன் தோழிமாருடன் விளையாடுவதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தாள்.

வழக்கம் போல தன் தோழிகளுடன் விளையாடச் சென்ற வாங்கா, அன்று ஹன்ஸ்கடா ச்சேஸ்மா என்ற நீர்நிலைக்குச் செல்கின்றாள். அந்த நாளும் அந்த இடமும்தான் தன் வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போடப்போகின்றது என்பதைச் சற்றும் அறியாதவளாய் விளையாடிக் கொண்டிருந்த வாங்காவை, திடீரென ஏற்பட்ட சுழல்புயல் 2 கிலோ மீற்றர் வரையில் அப்பால் சென்று வீசியது.

அந்தப் புயலிலும் அதிர்ஷ்ட வசமாய் உயிர் தப்பியவள் துரதிஷ்ட வசமாய்த் தனது பார்க்கும் திறனை இழக்கின்றாள். புயல் ஓய்ந்து விழிகள் திறந்த சிறுமியின் கண்கள் முழுவதும் தூசித்துணிக்கைகளும் மண்ணும் நிறைந்து காணப்பட்டன. பல வைத்தியங்கள் செய்தும் கூட இழந்த பார்வயை அவளால் மீண்டும் பெற முடியாமற் போனது.


சற்றும் எதிர்பார்க்கா வகையில் தன்னிளம் பருவத்திலேயே பார்வையை இழந்ததால் ஒடிந்து போன வாங்கா, அதைத் தொடர்ந்து தன் பார்வையைத் திருப்பித் தரும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டு இரவும் பகலும் ஜெபம் செய்தாள். ஆனால் இறைவனோ அவளுக்காக வேறு திட்டங்களை வகுத்து வைத்திருந்தார்.

இதன் பின்னான 3 வருடங்களைத் தொடர்ந்து செர்பியாவில் உள்ள பார்வையற்றோர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட வாங்கா, பார்வை இல்லாமல் வாழும் முறையைக் கற்றுக்கொள்கிறாள். அதுமட்டுமன்றி பார்வையற்றோரின் எழுத்துக்களை வாசிப்பது முதற்கொண்டு, பியானோ வாசித்தல், தையல், சமையல் போன்ற பல கலைகளையும் கற்றுக் கொள்கிறாள்.

படிப்படியாக தன் வருத்தத்தையும் வலிகளையும் கடந்து முழு நிறைவான வாழ்க்கையை தானும் வாழ முயற்சிப்பதாக உறுதி பூண்டுகொள்கிறாள்.
இப்படியான தன்னம்பிக்கையுடன் பார்வையற்றோர் மாளிகையில் இருந்து வீடு திரும்பிய வாங்கா, சிறந்த நகைச்சுவைப் பேச்சாளராக திகழ்ந்ததோடு, தனக்கு அனைத்தையும் முன்கூட்டியே அறியும் திறன் இருப்பதையும் முழுமையாக உணர்கிறாள்.

இதன் பயனை அவரது கிராமத்துப் பெண்கள் அடையுமாறு வழிசெய்தாள். குறித்த கிராமத்துப் பெண்கள் தமது ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி அதனை மண்பானையில் போட்டு, வாங்காவின் தோட்டத்தில் உள்ள சிவப்பு நிற ரோஜா செடியின் கீழே புதைத்துவிட்டுச் செல்வார்களாம். வாங்கா அவற்றைத் தன்னுடைய கணிப்புத் திறனின் மூலம் அறிந்து அவர்களுக்கான பதிலைத் தெரிவிப்பாராம்.

இப்படியிருக்கும் சந்தர்ப்பத்தில், முதன்முதலில் 2ஆம் உலகப் போரின் போதே வாங்காவின் புகழ் மணம் அவர்களது கிராமத்தைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

‘வாங் என்ற பெயரில் ஒரு குருட்டுப் பெண், போரில் காணாமற் போனவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, மற்றும் அவர்கள் இறந்து புதைக்கப்பட்ட இடங்கள் என்பவற்றை சரியாகக் கணித்துக் கூறுகிறாள்’ எனும் செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது.

வாங்காவின் உதவியை நாடி அருகிலுள்ள கிராமத்து மக்கள் வரத் தொடங்கினர்.1942 இல் யுகோலாவிய – போலந்து எல்லை திறக்கப்பட்ட பின்னர், நெடுந்தூரம் பயணம் செய்தும் பெருமளவிலான மக்கள் வாங்காவைச் சந்திக்க வந்தனர்.

பின்னர் 1942 ஆம் திருமண பந்தத்தில் இணைந்த வாங்கா, 1962 இல் தன் கணவரை இழந்தாள். காலம் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் வாங்காவைச் சந்திக்க வரவும் 1967இல் அந்நாட்டு அரசே இவரை எதிர்காலத்தைக் கணிக்கும் பணியிலமர்த்தி அவரது சேவையை அனைவரும் பெற வழிசமைத்துக் கொடுத்தது.

தன் வாழ்வில் இலட்சக்கணக்கில் எதிர்காலத்தில் வருவதுரைத்த வாங்கா, ‘ஏன் எனக்கு இப்படியொரு அமானுஷ்ய சக்தியைக் கொடுத்து கஷ்டப்படுத்துகிறாய்?’ என்று அடிக்கடி இறைவனிடம் கேட்டுக்கொள்வாராம்.

காரணம் மக்களின் பிரச்சனைகள், கஷ்டங்களை தினம் தினம் கேட்டுக் கேட்டு வாங்காவின் தூக்கத்திலும் கனவுகளாய் அவையே வருவதுண்டாம். இப்படியாய் வாழும் காலம் முழுவதையும் மக்களுக்காய் அர்ப்பணம் செய்த பாபா வாங்கா, தன் வாழ்வின் இறுதி அத்தியாயத்திலும் கூட தன்னுடைய வருவதுரைக்கும் திறனால் எதிர்காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பதையும் பூமி எப்போது அழியும் என்பதையும் கணித்துக் கூறிவிட்டே, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி 1996 ஆம் வருடம் பல்கேரியாவில் இயற்கையுடன் இணைந்தார்.

அவர் கூறிச்சென்ற கணிப்புக்களின்படி 2018 ஆம் ஆண்டின் பின் நடக்க இருக்கும் சுவாரஸ்யமான 8 விடயங்களைப் பார்ப்பதற்கு முன், அவருடைய தீர்க்கதரிசனத்தின் படியே துல்லியமாய் நடந்த விடயங்கள் இரண்டினைப் பார்க்கலாம்.

முதல் விடயம் சுனாமி. ‘ஆசியாவை ஒரு மிகப் பெரிய சுனாமி தாக்கும். அதில் பாக்கிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் காணாமற் போகும்’ எனக் கணித்துக் கூறினார். அவர் கூறியபடியே சுனாமி ஏற்பட்டு அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த நாடுகள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்நோக்கின.

அடுத்தது, இரட்டை கோபுர தாக்குதல். ‘அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள், இரண்டு இரும்புப் பறவைகள் மோதி இடிந்து விழும். அவ்விடத்தில் வழிந்தோடும் அப்பாவி மக்களின் குருதியைக் கண்டு ஓநாய்கள் மகிழ்ச்சி கொள்ளும்.’ என்று 1989 ஆம் ஆண்டு இவர் கணித்துக் கூறியது போன்றே 2001 ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட குறித்த இரட்டைக் கோபுர தாக்குதல் 3000 பேர்களின் உயிரைக் காவு கொண்டது.

இனி, 2018 க்குப் பின் உலகில் நிகழும் என பாபா வாங்கா கணித்துக் கூறிய 8 சுவாரஸ்யமான கணிப்புக்களைப் பார்க்கலாம்.

முதலாவது,
2018 க்குப் பின் உலகிலேயே மிகையாற்றல் கொண்ட நாடாக ஃ வல்லரசாக சீனாவே திகழும்.

இரண்டாவது,
2025 க்குப் பின் உணவுக்கு பதிலாக அல்லது மாற்றீடான பொருட்களை மனிதர் கண்டுபிடிப்பர். உதாரணமாக மருந்துவில்லைகள், பற்பசை போன்ற பொருட்கள். இவற்றை உண்ண ஆரம்பித்து விட்டார்களேயானால் உலகின் பட்டினி என்ற விடயம் இல்லாது போய்விடும். அதேசமயம், சுற்றியுள்ள இயற்கை உணவுகள் அனைத்தும் அழியப்பெற்று வெறுமனே பதப்படுத்தப்பட்ட, இரசாயனங்கள் கலக்கப் பெற்ற உணவுகள் மாத்திரமே எஞ்சியிருக்கும்.

மூன்றாவது,
இப்போது பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பனிக்கரடி, பென்குயின் போன்ற உயிரினங்கள் 2030 காலகட்டங்களில் முழுவதுமாய் அழிந்து போய்விடும். பனிவாழ் இனங்களின் பரிணாம வளர்ச்சி அனைத்துமே குறித்த காலகட்டத்தோடு முடிந்துவிடும்.

நான்காவது,
குளோனிங் தொழில் நுட்பமுறை மிகவும் சாத்தியமானதொன்றாகி பரவலாக சர்வசாதாரணமாக இடம்பெறும். இதன் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வான். (எடுத்துக்காட்டாய் பாதிக்கப்பட்ட கண்களுக்கு குளோனிங் முறையில் சிகிச்சையளித்து பார்வையைப் புதுப்பித்துக் கொள்ளல்)

ஐந்தாவது,
பூமியில் உள்ள மனிதர்கள் செவ்வாயில் வாழ ஆரம்பிப்பார்கள். அவர்கள் செவ்வாயில் வாழ ஆரம்பித்த 100 ஆண்டுகளில், தம்மை ‘மார்ஸியன்ஸ்’ அதாவது செவ்வாய்வாசிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பூமியில் வாழும் மக்களிடமிருந்து தம்மை வேறுபடுத்தி தாம் பூமிக்கு அடிமைப்பட்டவர்களாய் வாழ மாட்டோம் என்றும் தமக்குத் தனியான சுதந்திரம் வேண்டுமென்றும் கோரி சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் நிகழும்.

ஆறாவது,
மனித தலையீட்டினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் மூலம் உலகம் அழிவுக்கு வரும். மனிதனை உயர்த்திச் சென்றுகொண்டிருக்கும் விஞ்ஞான ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும் முற்றிலுமாயய் அழிவதோடு அவையே அனைத்து அழிவுக்கும் காரணமாய் அமையும்.

ஏழாவது,
குறித்த அந்த அழிவுடன் இப்போது உலகிலுள்ள மதங்கள் அனைத்துமே அழிந்துவிட, எஞ்சிய மனிதர்களால் புதியதொரு மதம் தோற்றுவிக்கப்பட்டு அதுவே அனைவராலும் பின்பற்றப்படப் போகின்றது.

எட்டாவது,
அழியாத அந்நிய கலப்பு. 4302 ஆம் ஆண்டிலிருந்து 4674ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தில் 340 பில்லியன் மக்கள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து வாழ்வர்.

இந்த மனிதர்களைப் போன்றே மற்றைய கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகளும் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டறிவர். அதன்பின் மனிதர்களுக்கும் வேறு கிரகங்களைச் சார்ந்தவர்களுக்கும் சேர்க்கை நிகழும்.

அக்கலப்பின் மூலம் ஏலியன் குழந்தைகளை அவர்கள் பிரசவிப்பர். ‘ஏலியன் ஹைப்பிரிட்’ என்று சொல்லப்படும் அக்குழந்தைகள் அழியாத அந்நியக் கலப்பு குழந்தைகளாகத் திகழ்வர். அவர்களுக்கு அழிவென்பதே கிடையாது. அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் அக்கால மக்களால் கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராகப் போற்றப்படுவர்.

இவற்றைப் போன்று இன்னும் பற்பல கணிப்புக்களை கணித்துக் கூறிய வாங்காவின் கணிப்புக்களில் இதுவரை 68% மான நிகழ்வுகள் நடந்துள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் வருவதுரைக்கும் தீர்க்கதரிசி வாங்கா தான் இறக்கும் தருவாயில் தன்னுடைய வருவதுரைக்கும் சக்தி அடுத்து யாரிடம் செல்லப்போகின்றது என்பதையும் உரைத்துவிட்டே இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி

7000 மனித உயிர்களை பலியெடுத்த மருத்துவரின் கையேழுத்து : மரணம் சில உண்மைகள்

விஜய்க்கு மட்டும் எப்படி இது அமைகிறது: பாடகியிடம் கேட்ட அஜித்