Posts

Showing posts from April, 2020

வைரஸ்கள் வாழும் திறக்கப்படாத அறை - வெளிவரும் மர்மங்கள்

கதவுகள் மற்றும் பூட்டுக்கள் என்பது நமக்கு பரிச்சப்படாத ஒரு விடயமலல்ல. அதன் தோற்றம் பற்றி நோக்குகையில், திறந்த வெளிகளில் தன்னை இயற்கையின் ஒரு பொருளாகக் கருதி வாழ்ந்த மனிதன் எப்போது தன் சுயத்தை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தானோ – ஒன்றைத் தனக்கானது என்று தனிப்படுத்தி நோக்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்தே இவை தோன்றியிருக்கக் கூடும் எனலாம். எது எவ்வாறிருப்பினும் கதவுகள் – பூட்டுக்கள் திறக்கப்படுவதற்கே அன்றி பூட்டியே வைப்பதற்கல்ல. என்றாலும் இன்றளவிலும் பல நூற்றாண்டுகளாகச் சில கட்டிடங்களின் கதவுகள் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளன. அதற்கான காரணங்கள் மர்மமாகவும் அமானுஷ்யம் நிறைந்ததாகவும் அமைந்துள்ள அதேசமயம், சில புதையல்களின் ரகசியம் காப்பதாகவும் கருதப்படுகின்றன. அவ்வாறு உலகில் திறக்கப்படாத – திறக்க கூடாத கதவுகள் உள்ள பல இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. அவற்றில் ஒன்றைப்பற்றிய தகவைலைத்தான் இன்று நாங்கள் பார்க்கப்போகிறோம்.  வாங்க வீடியோக்குள்ள போகலாம். #பெரியம்மை வைரஸ் தக்கவைப்புக் கதவுகள் (Small pox chamber) இந்தக் கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கின்றதென்பது உலக மக்கள் பலரும் அறிந்ததே. என்றாலும்

மனிதர்களை கடத்தும் வேற்றுக்கிரகவாசிகள் : திகிலூட்டும் மர்ம தீவு

திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. இந்த திகிலூட்டும் ஒரு இடம் பற்றிய பதிவு இன்று உங்களுக்காக... வாங்க வீடியோக்குள்ள போகலாம்... உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது. மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன. இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று "envaitenet island

உங்கள் கழிவறையில் அதிக துர்நாற்றம் வீசுகிறதா? அதை நீக்க சில எளிய வழிகள்!!!

சிலரது வீடுகளில் கழிவறை மிகவும் துர்நாற்றத்துடன் இருக்கும். சில வீடுகளில் அந்த கழிவறை துர்நாற்றம் வீடு முழுவதும் வீசும். இப்படி இருந்தால், எப்படி வீட்டில் இருக்க முடியும். பலர் இந்த துர்நாற்றத்தைத் தடுப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் ரூம் பிரஷ்னர்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் அது சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தாலோ அல்லது அவற்றை கழிவறையினுள் தெளித்தாலோ, துர்நாற்றம் வீசுவதையே தடுக்கலாம். சரி, இப்போது கழிவறையில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அப்பொருட்கள் என்னவென்று பார்ப்போம். எலுமிச்சை சாறு கழிவறை துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருட்களில் ஒன்று எலுமிச்சை சாறு. இந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் கழிவறையின் தரை மற்றும் சின்க்களில் தெளித்து விட்டு, சிறிது நேரம் கழித்து, நீரை ஊற்றுங்கள். இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்கும். பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை ஒரு பக்கெட் நீரில் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை கழிவறையை சுத்தம் செய்யுங்கள். இதன் மூலமும் கழிவறை நாற்றத்தைத் தடுக்கலாம். வினிகர் கருப்பு

கொரோனா காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்கள் செய்யவேண்டிய விடயங்கள்

கொரோனா கால ஊரடங்குவின்போது, வீட்டில் தங்குவது கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் வெறுமனே உட்கார்ந்து உங்கள் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அர்த்தமல்ல. இதில் கர்ப்பிணி பெண்களும் வீட்டிற்குள்ளே முடங்கிகிடக்கின்றனர். மேலும், இந்த கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் நபர்களில் கர்ப்பிணி பெண்களும் அடங்குவர். இதில், கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஆபத்து நிறைந்த பிரிவில் வருகிறார்கள். இந்த நெருக்கடி நாட்களில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் உடல் இயக்கத்தை நீங்கள் முற்றிலும் கட்டுப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தமல்ல. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதே நேரத்தில், கர்ப்பிணிப் பெண்களும் வீட்டிற்குள் வேலை செய்வதைக் குறைந்தாலும் கூட, மூன்று மாதங்களில் பொருத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடுதலாக, உங்கள் வீட்டில் வேலை செய்வது உங்களுக்குத் தேவையான தனியுரிமை மற்றும் ஆறுதலையும் அளிக்கும். கர்ப்ப காலத்தில் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு ஊக்குவிக்கப்படுகையில், எடையை பராமரிக்கவும், சுகப் பிரசவத்திற்க

ஏர் கண்டிஷன் மூலம் கொரோனா பரவுமா?

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தன்னுடைய தாக்கத்தை வேகமாக உலக நாடுகளிடையே வெளிப்படுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்களை காவு வாங்கிய கொரோனா வைரஸால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன. சுமார் இரண்டும் மாத காலமாக நிறைய நாடுகள் மற்றும் நாடுகளில் உள்ள பெரும்நகரங்கள் முற்றிலும் முடங்கி கிடக்கின்றன. கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 மில்லியன் கணக்கான மக்களிடையே வேகமாகப் பரவுவதால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய வைரஸைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நோய் பரவுவதை எதிர்த்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் குறித்த புதிய ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிடுகின்றனர். தற்போது வெளிவந்த ஆய்வில், கொரோனா வைரஸ் ஏர் கண்டிஷன் மூலம் பரவுகிறதா? என்பதை இக்கட்டுரையில் காணலாம். ஆய்வு பல சமீபத்திய ஆய்வுகள் கொரோனா வைரஸ் அட்டை, பிளாஸ்டிக், எஃகு மற்றும் தாமிரம் போன்ற மேற்பரப்புகளில் பல மணி நேரம் வாழக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.

நுகரும் திறன் குறைவடைகிறதா.? அப்படீன்ன உங்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை உலகளவில் 1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 19,072 ஆக உயர்ந்து 605 பேர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் வைரஸைப் பற்றி ஒரு புதிய ஆய்வு வெளிவருகிறது. மிக சமீபத்தில், ஒரு ஆய்வு வாசனை அல்லது சுவை இழப்பது கொரோனா வைரஸ் நோயின் (கோவிட்-19) ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவை கொரோனா வைரஸைக் கண்டறிந்த பிறகு கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகள் என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஓட்டோலரிங்காலஜி-ஹெட் அண்ட் நெக் சர்ஜரி மற்றும் பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் ஓட்டோரினோலரிங்காலஜி ஆகியவை இப்போது கோவிட்-19 இன் முதன்மை ஸ்கிரீனிங் அறிகுறிகளின் பட்டியலில் வாசனை இழப்பு (அனோஸ்மியா) மற்றும்

இந்த விசயங்களை செய்வதன் மூலமும் உங்களுக்கு கெரோனா நோய் பரவலாம்

இன்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். உலகெங்கிலும் பரவியுள்ள இந்த வைரஸ் ஒருவருடமிருந்து மற்றொருவருக்கு இருமல், தும்மல் வழியாகவும், சில சமயங்களில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் அல்லது நீர்த்துளிகள் படிந்த இடம் அல்லது பொருளை ஒருவர் தொட்டு, கைகளை கழுவாமல் முகத்தில் வைக்கும் போதும் பரவுகிறது. இந்த கொடிய வைரஸ் குறித்த ஆய்வுகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் குறித்த சில புதிய தகவல்கள் கிடைத்தவாறு தான் உள்ளன. இதற்காக பல நாடுகள் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவதோடு, ஊரடங்கைப் பிறப்பித்து, மக்களை வீட்டிலேயே இருக்க வைத்துள்ளது. அதோடு சுத்தமாக இருக்கவும் பரிந்துரைக்கிறது. ஆனால் நம்மிடம் உள்ள பல பழக்கங்கள் வைரஸ் தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. நகங்களைக் கடிப்பது கைவிரல் நகங்களில் ஏராளமான கிருமிகள் இருக்கும். பலருக்கும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி கிருமிகள் நிறைந்த நகங்களை எந்நேரமும், குறிப்பாக கொடிய கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் கடித்தால், பின் அந்த வைரஸ் உடலினுள் எளிதில் நுழை

கண்கள் மூலம் பரவும் கெரோனா வைரஸ் _ அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தன்னுடைய தாக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 லட்சத்திற்க்கு மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகள் தொடர்ந்து இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் உடலில் நுழைந்தவுடன் என்ன அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அவ்வவ்வபோது தெரிவித்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கொரோனா வைரஸ் இருமல், சளி, சோர்வு, தசை வலி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பற்றி மேலும் ஆய்வு செய்து வருவதால், புதிய ஆய்வு அறிக்கைகள் வெளிவருகின்றன. இதன் மூலம் கொரோனா வைரஸ் இளஞ