இலுமினாட்டிளின் விவசாய அழிப்பு சதி மர்மமான முறையில் இறந்த பெண்.!!

பூச்சிக் கொல்லி மருந்து என்வென்று உங்களிடம் கேட்டால் நீங்கள் சொல்லும் ஒரே பதில்  பூச்சிகளைக் கொல்லும் மருந்து தானே என்று சாதாரணமாக சொல்லிவிடுவீர்கள்..

மருந்து என்கிறீர்கள் அப்படீன்ன அதில் கொஞ்சத்தை உங்களால் சாப்பிட முடியுமா எனக்கேட்டால்..? பதில் சொல்ல கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறதல்லவா.??  அதை நீங்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்று என இன்னுமொரு கேள்விளை கேட்டால்.. இலகுவாக மீண்டும் பதில் வந்துவிடும்.. அதிலென்ன சந்தேகம் பூச்சிகொல்லி மருந்துகளை உண்டால் நாம செத்துப்போயிடுவம்..என்பீர்கள்.

சரி விசயத்துக்கு வருவோம். நேரடியாகச் சாப்பிடும் போது அது மனிதர்களைக் கொல்லும் என்றால், அது எப்படி பூச்சிக் கொல்லி யாக மட்டுமே இருக்க முடியும். அதை உயிர்கொல்லி என்று சொல்வது தானே சரியாக இருக்க முடியும். இப்போது புரிகிறதா...

நாமெல்லாம் பொய்தான் சொல்கிறோம் என்று?  ஒருவர் நம்பவைத்த பொய்களுக்கு கட்டுப்பட்டோ.. அல்லது நம்பியோ நமது வாழ்க்கை தவறான பாதையில் சென்றுகொண்டிருப்பதை நாம் உணராமல் இருக்கிறோம் என்பது புரிகிறதா..?

இலுமினாட்டிகளால் உலகஅரசியல் என்பது பல்வேறு வழிகளில் இடம்பெறுகிறது என்பதை பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.. இலுமினாட்டிகள் பற்றி இந்த பதிவில் நாம் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது என நினைக்கிறோம்.

பலரும் அவர்களை பல தடவை கூறியிருப்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள். இந்த பூச்சி கொல்லி மருந்துகளுக்கு பின்னாலும் இல்லுமினாட்டிகளின் உலகஅரசியல் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

தடுப்பூசி ஏற்றுவதற்கு பின்னால் எப்படி இவர்களது சதி கோட்பாடு இருக்கிறதோ அப்படித்தான் இந்த பூச்சி கொல்லி மருந்துகளுக்கு எதிராகவும் ஒரு சதி வைத்திருக்கிறார்கள் இவர்கள்... ஆம்.. இது பூச்சியை கொல்ல வந்த மருந்து அல்ல... மனிதர்களை கொல்ல உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறையே...

பூச்சிகளை வைத்து மனிதர்களை கொல்லும் இல்லுமினாட்டிகளின் சதி என்ன என்பதை பார்ப்போம் வாருங்கள்...

பூச்சிக்கொல்லியை நேரடியாக சாப்பிட்டால்தான் ஆபத்து என்றில்லை. காய், கனி, பால், முட்டை, இறைச்சி, குடிநீர், தாய்ப்பால் என்று எந்த வடிவிலும் அது நமது உடல் புகுந்து சிறுக சிறுக துன்பத்துக்கு ஆளாக்கிக் கொண்டு தானிருக்கிறது.

உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி உள்ளதா... மூச்சுத் திணறலா... சிறுநீரகத்தில் கல் அடைப்பா... கர்ப்பப் பையில் புற்றுநோயா... இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி... உங்கள் உடலில் கண்ணுக்குத் தெரியாமல் போய்ச் சேர்கின்ற பூச்சிக்கொல்லி நஞ்சுக்கும் பங்கிருக்க வாய்ப்பு உண்டு.

பூச்சிக் கொல்லி நஞ்சு என்பது செடிகளிலிருந்து பசுவின் வயிற்றுக்குள் போய், பால் வழியாக நமது உடலுக்குள் பாய்வதும் நடக்கிறது. தாய் வயிற்றுக்குள் இருந்து ரத்தம் பெற்றோமே... அன்று தொடங்கியே நம் தாயோடு சேர்த்து நாமும் நஞ்சுண்ட (ஆ)சாமிகள் தான்..

இந்த பூச்சி கொல்லி மருந்தின் தீவிரதத்தை விளக்க ஒரு நிகழ்வை உங்களுக்கு இங்கே நினைவூட்டுகிறேன்...  கேரள மாநிலத்தின் முந்திரிக் காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் 'எண்டோசல்பான்' என்ற பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில்....நடந்தது என்ன தெரியுமா..?  சுற்றுப்புறத்து ஊர்களில் பல குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன.

இத்தனைக்கும் அந்த முந்திரிப் பருப்பை குழந்தைகளின் தாயார் தின்னவுமில்லை, முந்திரிக் கொல்லையில் வேலை பார்க்கவும் இல்லை.

நஞ்சு கலந்த காற்றை சுவாசித்தது, காற்று வழியே நஞ்சு படிந்த ஓடையின் நீரை குடித்ததும்தான் பெருங்குற்றம் ஆகிப்போனது.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், நமது தேசத்தில் இப்படி ஆண்டுதோறும் ஆயிரம் லட்சம் கிலோ நஞ்சை நமது பயிரிலும் நிலத்திலும், நீரிலும், காற்றிலும் கலந்துகொண்டே இருக்கிறோம்.

இப்படியெல்லாம் நடக்குமென்று 1962-ம் ஆண்டே அமெரிக்காவைச் சேர்ந்த ராச்சேல் கார்சன் என்ற பெண் எச்சரித்தார்.  SILENT SPRING என்ற இந்த புத்தகத்தின் மூலம் பல உண்மைகளை வெளி கொண்டு வந்ததால் இந்த புத்தகம் எழுதியவர் இலுமினாட்டிகளால் கொல்லப் பட்டார்.

 SILENT SPRING புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது?

அமெரிக்காவில் பனிக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும். அந்தக் கொடுமை தாங்காமல் அங்கிருக்கும் ராபின் பறவை இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் , வசந்தம் பிறக்கும் போது தான் நாடு திரும்பும்.

வசந்தகாலம் நாடு திரும்ப வேண்டிய பறவைகள் திரும்பி வராமல் அந்த ராபின் பறவை, அமெரிக்காவிலிருந்தே காணாமல் போக ஆரம்பித்தது.

இங்கிலாந்து நாட்டில் இந்த பறவைகள் காணாமல் போனதற்கான மர்மத்தின் பின்னணியில்தான் 1956-ம் ஆண்டு வாக்கில்  இப்படிஒரு நூல் பிறக்க காரணம்.

அந்த நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று அழித்துக் கொண்டிருந்தன. அந்த வண்டுகளை அழிக்க பூச்சி கொல்லியை ஹெலிகாப்டர் மூலம் தெளித்தார்கள்.

ஜப்பான் வண்டுகள் செத்துப் போயின. ஆனால், இன்னொரு விபரீதம் நிகழ்ந்தது.

நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்த போது, அதைத் தின்ற மண்புழுக்கள் இறந்து போயின. மண்புழுவைத் தின்ற ராபின் பறவைகளும் இறந்து போயின.

ஹெலிகாப்டர் தூவிய நஞ்சு, நீரில் விழவே மீன்கள் அரை மரண நிலையில் நீரோடையில் மிதந்தன.

கொடுமை இத்தோடு முடியவில்லை.

மண்புழுவை உண்ட பறவைகள், கூடு கட்டவில்லை. அதைவிட சற்றே குறைவாக மண்புழுவை உண்ட பறவைகள் கூடு கட்டின. ஆனால், முட்டை இட்டதே தவிர அவை குஞ்சு பொறிக்கவில்லை.

13 நாட்களில் முட்டையிலிருந்து வெளி வரவேண்டும் குஞ்சு. 21 நாளாகியும் குஞ்சு வராதது கண்டு தாய்ப்பறவை ஏங்கிப் போனது. பூச்சிக் கொல்லி மருந்துகள் உயிரணுவை அழித்து, உயிரினங்களை மலடாக்குகிறது என்று அப்போது கண்டறிந்தனர்.

அமெரிக்காவின் தேசியப் பறவையான வழுக்கை தலைக் கழுகும் மெல்ல மெல்ல மறைந்து வருவதைப் பார்த்தார்கள். இந்த விஷயங்களை எல்லாம் தான் புத்தகமாக எழுதி உலகுக்கு வெளிப்படுத்தி அதிர வைத்தார் ராச்சேல் கார்சன்.

இந்த ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் மனித இனத்துக்கே தீங்கு விளைவிப்பதாக பகிரங்கமாக கூறினார். இதற்கு பின்னால் கார்பரேட் சதி இருப்பதாக வெளிப்படையாக பேசினார். இவரால் எழுதப்பட்டு வெளிவந்த அந்த புத்தகம் அந்த ஆண்டின் சர்ச்சைக்குரிய புத்தகமாக மாறியது.. பலராலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.. இறுதியில் மர்மமான முறையில் இவர் கொல்லப்படுகிறார்..  இல்லுமினாட்களின் சதி வெற்றிபெறுகிறது......... மனித குலம் இன்றுவரை மீள முடியாமல் தவிக்கிறது...

Comments

Popular posts from this blog

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி

7000 மனித உயிர்களை பலியெடுத்த மருத்துவரின் கையேழுத்து : மரணம் சில உண்மைகள்

விஜய்க்கு மட்டும் எப்படி இது அமைகிறது: பாடகியிடம் கேட்ட அஜித்